Followers

2009 நிகழ்வுகளின் தொகுப்பு- விருதுகள்

on Monday, May 23, 2011


கோல்டன் குளோப் விருது

உலகம் முழுவதும் திரைப்படம், நாடகம், தொலைக்காட்சித்துறையில் சாதனை படைத் தவர்களுக்கு ஹாலிவுட்டைச் சேர்ந்த திரைப் பட விமர்சகர் அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கிவருகிறது. ஸ்லம்டாக் மில்லியனர்என்ற ஆங்கிலப் படத்துக்கு மிகச்சிறப்பாக இசை யமைத்த .ஆர். ரஹ்மானுக்கு உலக புகழ் பெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை .ஆர்.ரஹ்மான் பெற்றுள்ளார்.

81-வது ஆஸ்கார் விருதுகள்

திரைப்படத் துறையில் மிக உயரிய விரு தாக கருதப்படுவது ஆஸ்கார் விருதாகும். ஆஸ்கார் விருதின் 81-—வது விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கோடாக் அரங்கில் நடைபெற் றது. இதில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ‘”ஸ்லம்டாக் மில்லியனர்என்ற ஆங்கில படத்துக்கு 8 ஆஸ்கார் விருதுகள் வழங்கப் பட்டன. இந்த படத்துக்கு சிறப்பாக இசை யமைத்த இந்தியாவைச் சேர்ந்த இசை யமைப்பாளர் .ஆர். ரஹ்மானுக்கு 2 ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன.

இளம் நோபல் விருது

அறிவியல் திறன் போட்டியில் முதலிடம் பெற்ற அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவி ஷிவானி சட்டுக்கு இளம் நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி விருது

மியான்மரில் ஜனநாயகத்தை மீட்கப் போராடி வரும் ஆங் சான் சூகி-க்குமகாத்மா காந்திவிருது வழங்கப்படவுள்ளது. தென்னாப் பிரிக்காவில் உள்ள மகாத்மா காந்தி அறக்கட் டளை அவருக்கு இந்த விருதை அறிவித் துள்ளது. மியான்மரில் ஜனநாயகத் துக்காக போராடும் சூகிசுமார் இருபது ஆண்டு கால மாக வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டுள்ளார். அமைதியான முறையில் ஜனநாயகத்துக்காக போராடி வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

மகசேசே விருது

இந்தியாவைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் தீப் ஜோஷி உள்பட 5 பேர் 2009-ம் ஆண்டுக் கான மகசேசே விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டனர். பிலிப்பைன்சின் மறைந்த முன்னாள் அதிபர் மகசேசேவின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படுகிறது. கிராமப்புற மக்களுக்கு சிறப் பாக சேவையாற்றியதற்காக தீப் ஜோஷிக்கு மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.

பாரத ரத்னா விருது

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வசிக்கும் இந்துஸ்தானி பாடகர் பண்டிட் பீம்சென் ஜோஷிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது ஜனாதிபதியிடம் டெல்லிக்கு சென்று பெறமுடியாத சூழ்நிலையில் உடல் நிலை சரியில்லை என்பதால் குடியரசுத் தலை வரின் உத்தரவுப்படி பீம்சென் வீட்டிலேயே சிறிய விழா ஏற்பாடு செய்து அவ்விருதை உள்துறை அமைச்சரின் கூடுதல் செயலர் அக மது வழங்கினார். பாரத ரத்னா விருது 1954-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. (2002- 2007 வரை இவ்விருது வழங்கப்படவில்லை)

கிராமிய விருது

இசைத்துறையில் சிறந்து விளங்குபவர் களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கிராமிய விருது பிரபல இந்திய தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேனுக்கு அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.

இந்திரா காந்தி விருது- 2009

ஜம்முகாஷ்மீரைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் -எழுத்தாளர்- மனித உரிமை ஆர்வலரான பல்ராஜ் புரி தேசிய ஒருமைப் பாட்டுக்கான இந்திரா காந்தி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். தேசிய ஒருமைப் பாட்டுக்காக சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவர் இந்திரா காந்தி விருது வழங்கி கவுரவிக்கப் பட்டார். மேலும் 2005-ல் பத்மபூஷன் விரு தைப் பெற்றவர் பல்ராஜ் புரி என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment